மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2022-07-16 19:40 GMT

லால்குடி, ஜூலை.17-

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

பெண் பலி

லால்குடியை அடுத்த ஆங்கரை கீழத் தெருவை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி லோகாம்பாள் (வயது 55). சம்பவத்தன்று இவரும், அவரது தங்கை போதம்பாலும் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது லால்குடியில் இருந்து திருச்சிக்கு சென்ற பம்பரம் சுற்றி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய்டோனி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லோகாம்பாள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு சஞ்சை டோனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்