பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-18 20:58 GMT

மதுரை அழகப்பன் நகர், பாரதி நகர் விரிவாக்கம் செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் ஜெயா (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ஜெயா வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று ஜெயா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்