திண்டுக்கல் அருகே தூக்கில் தொழிலாளி பிணம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி தூக்கில் பிணமாக கிடந்தார்.

Update: 2023-10-10 21:30 GMT

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 75). இவரது மகன் சுரேஷ்குமார் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சுரேஷ்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரத்தினம் உடல் நலக்குறைவால் கடந்த 2 மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் காமராஜபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் சுரேஷ்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுரேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்