தொழிலாளி தற்கொலை

வடமதுரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொைல செய்து கொண்டார்.;

Update:2023-03-04 19:59 IST

வடமதுரை அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்தவர் பாலக்குமார் (வயது 21). இவர், அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி வயிற்றுவலி தாங்க முடியாததால் பாலக்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் பாலக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்