இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-11 17:01 GMT

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.தர்மபுரி அருகே உள்ள சின்ன மாட்டு கடை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் ஷாலினி (வயது 17). பிளஸ்- 2 வரை படித்துள்ளார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி சென்று உடலில் பற்றிய தீயை அணைத்தனர். ஷாலினியை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஷாலினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்