பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம்

பழனி அருகே குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது.

Update: 2023-10-20 21:30 GMT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் மந்தைக்குளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நீரில் மிதந்தபடி பிணமாக கிடந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது, இறந்தவர் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார். அவரது இடுப்பு பகுதியில் சவரம் செய்யும் கத்தி இருந்தது. ஆனால் அவர் குறித்த விவரம் தெரியவில்லை. அதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்