போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

உவரியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2022-06-14 20:07 GMT

திசையன்விளை:

வள்ளியூர் அமைச்சிக்கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் இளங்கோ (வயது 21). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்