லாலாபேட்டை அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்த கிருபா (வயது 27) என்பவர் பராமரிப்பு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிருபா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிருபாவின் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.