"கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட திமுக கட்சி ஊழல் செய்தது” - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட திமுக கட்சி ஊழல் செய்தது என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2021-03-27 07:56 GMT
ராதாபுரம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். 

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான்... கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட திமுக கட்சி ஊழல் செய்தது’ என்று விமர்சனம் செய்தார்.

மேலும் செய்திகள்