பிரேசிலில் கொரோனாவுக்கு பலி 70 ஆயிரத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-07-11 21:14 GMT
பியூனஸ் அயர்ஸ், 

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,214 பேரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதே நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் செய்திகள்