இலங்கையில் விசா விதிமீறல்களில் ஈடுபட்ட இந்தியர் கைது

இலங்கையில் சுற்றுலா விசாவில் சென்று சட்டவிரோத முறையில் வணிகத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது செய்யப்பட்டு உள்ளார். #VisaViolation

Update: 2018-04-16 09:12 GMT

கொழும்பு,

இலங்கையின் மொடாரா நகரில் ராஜாமல்வாட்டா சந்திப்பு பகுதியில் நபர் ஒருவர் துணிகளை விற்று வந்துள்ளார்.  52 வயது நிறைந்த அந்த நபரை, சட்டவிரோத முறையில் துணி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர்.

அவர் குடியுரிமை விதிகளை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.  கைது செய்யப்பட்ட அந்நபர் இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுகிறார்.  இதனிடையே மொடாரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்