இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள்

இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு சுற்றுலா பயணிகள் அசத்தினர்.

Update: 2019-02-19 16:26 GMT
வெனிஸ்,

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வந்து குவிந்துள்ளனர்.  அவர்கள் படகுகளில் அணிவகுத்து சென்றனர். குறிப்பாக இளவரசிகளாகவும், கடல் கொள்ளையர்களாகவும் வேடம் அணிந்து அசத்தினர்.  இந்த திருவிழா கொண்டாட்டத்தில் ஆடை அலங்காரங்கள் காண்போரை கவர்ந்திழுக்கின்றன.

இதில், அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் வண்ண மலர் கொத்துகளை சுமந்தபடி சென்றன.  அவற்றில் இருந்து வண்ண வண்ண பலூன்கள் திடீரென வானில் பறக்க விடப்பட்டன.  வண்ண புகையும் பரவியபடி சென்றது ஆச்சரியப்பட வைத்தது.

மேலும் செய்திகள்