ஐ.எஸ். தெற்கு ஆசிய கிளைக்கு ஐ.நா. தடை

ஐ.எஸ்.ஐ.எல்.–கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

Update: 2019-05-15 20:45 GMT
நியூயார்க், 

ஐ.எஸ்.ஐ.எல்.–கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த இயக்கம், ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015–ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்