அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி

அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.

Update: 2019-05-17 22:30 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் நகருக்கு அருகேயுள்ள பிஷர்ஸ் நகரில் வசித்து வந்தவர்கள் வருண்தீப் (வயது 19), தவ்னீத் சாஹல் (22), குர்ஜோத் சந்து (20). இவர்கள், இந்திய வம்சாவளி சீக்கியர்கள். இவர்கள் 3 பேரும் அங்கு சொகுசு காரில் கடந்த புதன்கிழமையன்று பயணம் செய்தனர். அப்போது அந்த கார் திடீரென ஓட்டியவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது.

இதில் வருண்தீப்பும், தவ்னீத் சாஹலும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குர்ஜோத் சந்து படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த குர்ஜோத் சந்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்துக்குள்ளான காரை ஓட்டிச்சென்ற தவ்னீத் சாஹல், இருக்கை ‘பெல்ட்’ அணியவில்லை என போலீசார் கூறினர்.

விபத்தில் 2 சீக்கியர்கள் பலியானது அங்குள்ள சீக்கிய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்