அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

Update: 2019-09-21 15:14 GMT
கரோலினா, 

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு சட்டமே அனுமதி அளிப்பதால், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் தெற்கு கரோலினா மாகாணத்தின் லான்காஸ்டர் நகரத்தில் உள்ள  பார் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக திடீரென துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்