தாய்லாந்தில் பிரதமர் மோடி : இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
தாய்லாந்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பங்காக்
தாய்லாந்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார். பாங்காக் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிடுகிறார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.