தாய்லாந்தில் ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை மோடி நேற்று சந்தித்தார்.

Update: 2019-11-04 19:45 GMT
பாங்காக்,

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், நேற்று கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடந்தது.

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அந்தவகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று காலையில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இதைப்போல ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவருடன் விவாதித்தார்.

பின்னர் வியட்நாம் பிரதமர் நுயன் ஜுவான் பக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்