எம்.பி. ஆக சிறிசேனா முயற்சி; நீக்கப்பட்ட பிரமுகர் குற்றச்சாட்டு

எம்.பி. ஆக சிறிசேனா முயற்சி செய்வதாக நீக்கப்பட்ட பிரமுகர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

Update: 2019-11-24 21:11 GMT
கொழும்பு,

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி, கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்தது. ஆனால், சுதந்திரா கட்சி பிரமுகர் பவுசி, சஜித் பிரேமதாசாவை ஆதரித்தார். அதனால், பவுசியை சுதந்திரா கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

சிறிசேனாவால் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டவர், பவுசி. தன்னை நியமன எம்.பி. பதவியில் இருந்தும் நீக்கி விட்டு, தனக்கு பதிலாக அந்த பதவியில் அமர சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக பவுசி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்