5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்: கனடா விமான நிறுவனம் நடவடிக்கை

5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் செய்து, கனடா விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2020-03-23 22:29 GMT
டொரண்டோ,

கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரை தலைமையிடமாக கொண்டது, ஏர் கனடா விமான நிறுவனம். கொரோனா அச்சுறுத்தலால், தனது அமெரிக்க மற்றும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

அதனால், தனது பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பேர், விமான உதவியாளர்கள் 1,549 பேர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கிய பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்