பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-21 20:26 GMT
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டி விட்டது.

அதுபோல், கடந்த 24 மணி நேரத்தில் 1,022 பேர் பலியானார்கள். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 49 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்தில் பிரேசில் இருக்கிறது.

மேலும் செய்திகள்