ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 போலீஸ் அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

Update: 2020-06-22 00:15 GMT
Photo Credit: AFP

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அரசுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணமான பக்லானில் புல்-யு-குமாரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் பலியாகினர்.10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். அதே சமயம் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகள்