பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-07-08 10:18 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,37,489 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,922 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை 1,40,965 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,236 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்