இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது.

Update: 2024-05-08 05:47 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவளுக்கு சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் சிறுமியிடம் அந்த வாலிபர் நட்பாக பழகி வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி சிறுமியை வாலிபர் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார். இதனையடுத்து அங்கு சென்ற சிறுமியை அந்த வாலிபர் அங்கு வைத்து பலாத்காரம் செய்தார்.

இதன் பின்னர் அந்த வாலிபர் கடந்த 4-ந்தேதி மீண்டும் சிறுமியை அழைத்தார். அப்போது வாலிபர் மற்றும் அவரது நண்பர் உள்பட 2 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் பல சந்தர்ப்பங்களில் 2 பேரும் சேர்ந்து சிறுமியை தொந்தரவு செய்ததால் சிறுமி போலீசில் புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசேரி பகுதியில் பதுங்கி இருந்த 20 வயதுடைய 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும், போலீசார் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 9-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்