கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற இரண்டு அமெரிக்க உளவு விமானம் - தடுத்து நிறுத்திய ரஷ்ய போர் விமானம்

கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற இரண்டு அமெரிக்க உளவு விமானங்களை ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Update: 2020-08-13 17:53 GMT
மாஸ்கோ, 

கிழக்கு ஐரோப்பா அருகே கருங்கடல் பகுதியில் பறக்க முயன்ற அமெரிக்க விமானப்படையின் இரண்டு உளவு விமானங்களை ரஷ்ய போர் விமானம் தடுத்து நிறுத்தி உள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்காவின் ஆர்.சி 135 விமானம் மற்றும் பி- 8 போஸிடான் (Poseidon) போர் விமானம் ஆகியவை அத்துமீறி நுழைந்தன. அவற்றை வழிமறித்த தங்கள் நாட்டின் போர் விமானம் கருங்கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்து சென்றது” என்று அதில் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்