வரும் 2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவர்; ஐ.நா. அமைப்பு வேதனை

கொரோனா தொற்றுகளால் வருகிற 2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. அமைப்பு வேதனை தெரிவித்து உள்ளது.

Update: 2020-09-03 14:11 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  பொருளாதார வளர்ச்சியும் குறைந்து உள்ளது.  இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில், ஐ.நா. மகளிர் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுகளால் வருகிற 2021ம் ஆண்டில் பெண்கள், சிறுமிகள் என 4.7 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என வேதனை தெரிவித்து உள்ளது.

வறுமை கோட்டிற்கு மேலே அவர்களை கொண்டு வந்ததற்கான பல ஆண்டுகால வளர்ச்சி நிலை மீண்டும் பின்னோக்கி செல்ல கூடிய சூழல் உள்ளது.  இவற்றில் கொரோனா பாதிப்புகளால், தெற்காசியாவில் பெண்களின் வறுமை விகிதம் 2021ம் ஆண்டில் அதிகரிக்கும்.

ஆண்களை காட்டிலும் பெண்களில் 25 முதல் 34 வயதுடையவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வறுமை நிலையை அடைவார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்