நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு- முதல் நாளில் மருத்துவ துறைக்கான பரிசு

2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன

Update: 2020-10-05 04:34 GMT
ஸ்டாக்ஹோம்

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று பிற்பகல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. 

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்