ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு
ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பியா,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கடுமையான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.