அமீரகத்தில் புதிதாக 1,810 பேருக்கு கொரோனா 3-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

அமீரகத்தில் புதிதாக 1,810 பேருக்கு கொரோனா 3-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது.

Update: 2021-04-12 12:12 GMT

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 42 ஆயிரத்து 415 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,810 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 747 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,652 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 2 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 760 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்