அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-06-12 18:02 GMT
சிகாகோ,

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  அந்நாட்டின் தென்கிழக்கில் புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பல்பொருள் விற்பனை அங்காடிக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளார்.  

இதன்பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.  இந்த சம்பவத்தில், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு தெற்கே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டம் மீது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 29 வயது பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதுதவிர 9 பேர் காயமடைந்தனர்.  அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

காயமடைந்த மற்ற 9 பேரும் உள்ளூரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்