மெக்சிகோவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.
ஹக்சிட்லா,
மெக்சிகோ நாட்டின் ஹக்சிட்லா நகருக்கு 3 கி.மீ. மேற்கே இன்று அதிகாலை 2.25 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
மெக்சிகோவில் உள்ள ரிசோ டி ஓரோ நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் வடகிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
217.4 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம், ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.