சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஜியாங்சு,
சீனாவின் ஜியாங்சு மாகாணம் சுஜோ நகரில் ஓட்டல் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 9 பேரை தேடும் பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று அவர்கள் 9 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனையடுத்து அந்த ஒட்டலுடன் தொடர்புடைய முக்கியமான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.