சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Update: 2021-09-17 15:38 GMT
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அங்கு 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் கொரோனா காரணமாக அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு சென்றவர்களில் 31 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாமென் மாகாணத்தில் 31 பேருக்கும், புட்டியன் மாகாணத்தில் 28 பேருக்கும், குவான்சோவ் நகரில் ஒரு நபருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்