ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
டோக்கியோ,
ஜப்பானில் டோசிகி மாகாணத்தின் தெற்கே கிழக்கு கடற்கரையோரம் இன்று மாலை 5.37 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் நீருக்கு அடியில் 380 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.