ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி , 6 பேர் காயம்

தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்

Update: 2021-10-27 06:10 GMT
பாக்தாத்,

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள்  தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  அங்குள்ள  தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள் 6 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை  தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்