பிரேசிலில் புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுப்பு

பிரேசிலில் புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 20:58 GMT
பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பரானா மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்போது, சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து பிரேசில் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கெல்னர் கூறுகையில், “இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு. ஏனெனில் இது, இதுவரை அறியப்படாத ஒரு புதிய இனத்தை சேர்ந்த டைனோசர் ஆகும்” என கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த வகை டைனோசர்கள் ‘பெர்தசவ்ரா லியோபோல்டினே’ என்று அறியப்படுகின்றன. இவை 7 முதல் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. 80 செ.மீ. உயரம், ஒரு மீட்டர் நீளமும் கொண்ட இந்த டைனோசர்கள் வாழ்நாள் முழுவதும் பற்கள் இல்லாமல் இருந்துள்ளன” என்றார்.

இதனிடையே இந்த டைனோசர் இனத்துக்கு பிரேசிலிய விலங்கியல் ஆர்வலர் பெர்தா லூட்ஸ் மற்றும் பிரேசில் ராணி மரியா லியோபோல்டினா ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்