அமெரிக்காவை தாக்கிய சூறாவளிகள்; 70 பேர் பலி என அச்சம்

அமெரிக்காவில் தென்மேற்கு பகுதியில் பல சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் 70 பேர் உயிரிழந்து உள்ளனர் என அஞ்சப்படுகிறது.

Update: 2021-12-11 19:48 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தென்மேற்கே கென்டகி பகுதியில் பல சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.  இதில் 70 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என அஞ்சப்படுகிறது என்று கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார்.

இந்த சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதல்களுக்கு அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.



மேலும் செய்திகள்