ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; அரசு உயரதிகாரி உள்பட 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-01-22 16:03 GMT

காபூல்,


ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பாரியாப் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  இதனால், பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் முடங்கின.  இந்த நிலையில், தவுலத் அபாத் மாவட்டத்தின் ஜங்கால் பகுதியில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  9 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்களில், மாகாண தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணைய தலைவரான ஜாம்ஷித் குர்ஷித் என்பவரும் அடங்குவார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்