ரஷியா-உக்ரைன் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முன்வருமாறு சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர,சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2022-03-22 21:27 IST
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ 48வது அமர்வில், சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ உட்பட 600க்கும் மேற்பட்ட உலக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

இந்த நிலையில், ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்

."வெளியுறவு மந்திரிகளுடனான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில், இந்த கலந்துரையாடலின் போது, உக்ரைன் ரஷியா போரை எப்படி மத்தியஸ்தம் செய்யலாம், எப்படி போர் நிறுத்தத்தை கொண்டு வரலாம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

சீனாவுடன் சேர்ந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து, நாம் அனைவரும் எப்படி இந்த இருநாடுகளுக்கு இடையேயான மோதலை தடுத்து நிறுத்த முயற்சி செய்யலாம் என்பதை நான் விவாதிக்க விரும்புகிறேன். 

இது இப்படியே தொடர்ந்தால், அது உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று இம்ரான் கான் அந்த கூட்டத்தில் பேசினார்.

ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் பற்றி சீனாவும் பாகிஸ்தானும் கவலை தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை சீனாவின் ஆதரவோடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்