பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் 5.4 அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் ரிக்டர் 5.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-08-09 19:29 GMT

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மின்டானோ பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்