பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

சுலாத் நகரம் அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-02-14 10:50 GMT

மனிலா,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்