மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

மியான்மரில் இன்று காலை 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-17 05:09 GMT

நெய்பிடாவ்,

மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று காலை 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 47 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த மாதம் ஜனவரி 12-ம் தேதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்