ஸ்பெயினில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு !

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது.

Update: 2022-12-25 21:52 GMT

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பொன்டேவேத்ரா மாகாணம் செர்டெடோ-கோடோபேட் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் பலியாகினர். 3 படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்