மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: தென் கொரியா தகவல்

வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Update: 2022-05-24 22:43 GMT

சியோல்,

வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோரக் காவல்படையும் வடகொரியா ஏவுகணையை ஏவியதாக சந்தேகிக்கிறது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, வட கொரியா இன்று அதன் கிழக்கு கடற்கரையில் குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்