அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து ஈரான் கியாஸ் குழாய் திட்டத்துக்கு விலக்கு கோரும் பாகிஸ்தான்

ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-27 07:11 GMT

இஸ்லாமாபாத்,

அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில் கியாஸ் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 2009-ல் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் முதலில் இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் கியாஸ் குழாய் திட்டம் என கருதப்பட்டது. ஆனால் இந்தியா அதனை கைவிட்டதால் ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு திட்டமாக மாறியது.

இதற்காக 1,150 கிலோ மீட்டர் நீளமுள்ள கியாஸ் குழாய் இரு நாடுகளிடையே பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது. இதனால் பாகிஸ்தான் இந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது. இந்தநிலையில் தற்போது அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து விலக்கு பெற முடிவு செய்திருப்பதாக பாகிஸ்தான் பெட்ரோலிய துறை மந்திரி முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்