ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ...சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் சேதமாகி உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Update: 2022-07-02 08:49 GMT

ஸ்பெயின்,

ஸ்பெயினில் சண்ட் அண்டொனி டி கலொன்ங் நகரில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் சேதமாகி உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கோஸ்டா பிராவாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்