ஒரேநாளில் 14 திருமணங்கள் நடந்தன

சென்னிமலை முருகன் கோவிலில் ஒரேநாளில் 14 திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-06-01 20:42 GMT

சென்னிமலை:

சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட இந்த கோவிலில் திருமணம் செய்துகொண்டால் மணமக்கள் குறைவின்றி வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் சுபமுகூர்த்த நாட்களில் சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் 14 திருமணங்கள் ஒரே நேரத்தில் சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்றன. இந்த திருமணங்களில் கலந்து கொள்ள கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் மணமக்களின் உறவினர்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடிகள் தங்கள் உறவினர்களுடன் வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்கள். கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்