முறையாக வழிபட்டால் முக்தி

இறைவனை தொழும் விரதங்களை, அவற்றின் உண்மை கருத்துக்களை உணர்ந்து அதன்வழி நின்று விரதத்தை கடைப்பிடித்து முழுப்பயனையும் அடைய வேண்டும்.

Update: 2017-02-21 09:29 GMT
காசிவராத்திரி விரதத்தை மேற்கொள்பவர்கள், அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று, ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, சதுர்த்தசியில் உபவாசம் இருந்து தூக்கம் களைந்து, நான்கு யாமங்களிலும், சிவபெருமானை பூஜித்து வழிபட்டு, மறுதினம் அடியார்களுக்கும், பிராமணர்களுக் கும் அன்னதானம் வழங்க வேண்டும். அதன் மூலம் முக்தியை பெறலாம். முக்தி அடைய விரும்பும் அனைவரும், மகாசிவராத்திரி விரதம் ஒன்றை மட்டும் முறையாக, 24 ஆண்டுகள் செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களுடன், சிவகதியையும் அடைவார்கள்.

பெறுவதற்கு அரியதான மனிதப்   பிறவியை பெற்றிருக்கும் நாம், இறைவனை தொழும் விரதங்களை,  அவற்றின் உண்மை கருத்துக்களை உணர்ந்து அதன்வழி நின்று விரதத்தை கடைப்பிடித்து  முழுப்பயனையும் அடைய வேண்டும்.

மேலும் செய்திகள்