பொன்மொழி
குளத்தில் அமிழ்த்திய குடத்தில், தண்ணீர் போகும் போது சத்தம் வரும்.
நீர் நிறைந்து விட்டால் சத்தம் நின்று விடும். அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை வேறொரு இடத்தில் ஊற்றும் போதும் சத்தம் வரும். நீர் நிரம்பியிருக்கும் வரை சத்தம் வராது. அதே போல் அனைத்தும் அறிந்தவர்களும், முழுமை பெற்றவர்களும் அமைதி காப்பார்கள்.
-ராமகிருஷ்ணர்
-ராமகிருஷ்ணர்