நீடாமங்கலம்
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சத்ருசம்ஹார யாகம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.