சித்திரை திருவிழா 7-ம் நாள்: பிச்சாடனர் கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

Update: 2024-04-18 05:14 GMT

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அவ்வகையில், திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை சுந்தரேஸ்வரர் பிச்சாடனார் ரூபத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

நாளை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்